இந்த யோகத்தை தென்நாட்டில் 'வாசியோகம்' என்றும், வடநாட்டில் 'தந்திர யோகம்'
என்றும் சொல்கிறார்கள். திருமூலர் திருமந்திரத்தில் சுமார் 80 பாடல்களில்
இந்த வாசி யோகத்தின் சிறப்புகளையும், அதனால் அடையக்கூடிய பலன்களையும்
விரிவாகச் சொல்லி இருக்கிறார். பதினெண் சித்தர்கள் வாசியோகத்தைப் பற்றியே
பாடல்களாகப் பாடி வைத்துப் போய் இருக்கிறார்கள். ஔவையார் விநாயகர் அகவல்
முழுவதுமே யோகத்தைப் பற்றிய பாடலாகவே செய்திருக்கிறார். ஔவைக் குறளும்
முழுக்க யோகத்தைப் பற்றியே அமைந்துள்ளது. இன்னும் பல சித்தர்களும்,
மகான்களும் சைவ ஆகமங்களிலும் தந்திர யோகம் என்கிற வாசி யோகத்தைப் பற்றியே
கூறி இருக்கிறார்கள்.