கால்நடை வளர்ப்பு என்பது வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் யாவருமே மேற்கொள்ளும் ஒன்றாக்மு. நிலம் வைத்திருப்பவர்கள், மாடுகள், எருமைகள் அதிகம் வைத்திருந்தாலும், நிலமற்ற எழைகள் அதிகம் வளர்ப்பது வெள்ளாடுகளையே. பால் உற்பத்திக்குக் கலப்பினப் பெருக்கம் பெருமளவில் ஏற்பட்டுள்ளது. முட்டை உற்பத்திக்கு வீரியக் கோழிப் பண்ணைகள் எங்கும் தோன்றியுள்ளன. யாவரும் விரும்பும் வெள்ளாட்டு இறைச்சி உற்பத்தியும் அதிகரிப்பது அவசியம். ஆகவே, நிறைய வெள்ளாட்டுப் பண்ணைகள் தோன்ற வேண்டும்.
ஏழையின் நண்பனாகவும், ஒரே சொத்தாகவும் உள்ள வெள்ளாடு வளர்ப்பில் தற்போது பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆர்வத்தை ஆய்விடும்போது வெள்ளாடு, இருபத்துஒன்றாம் நூற்றாண்டு விலங்காக உருவாகிவிடும்.