கோடீஸ்வரக் குடும்பத்தைச்சேர்ந்த புராதனமான ஆசாரங்கள் நிறைந்த நம்பூதிரிக் குடும்ப몮 பிரதிநிதியான திக்குவாய் இளைஞன் ஒருவன், முதலில் தனது இனத்துக்குள் சீர்திருத்தம் செய்யத் தொடங்கி.. பின்னர் அது சமூக்கச் சீர்திருத்தமாகி, படிப்படியாக அது தேசியத்தில் கலந்து, இறுதியில் பொதுவுடைமைக் கொள்கைகளில் பரிணாம்ம் அடைந்த வரலாறு இது. அன்றைய கோடி ரூபாய்க்கும் அதிகமான தனது சொத்துக்களைக் கட்சிக்கு எழுதிக்கொடுத்துவிட்டு, கடைசி வரையில் வாடகை வீட்டிலேயே குடியிருந்து, மரணம் வரை சமூகச் சிந்தனையுடன் வாழ்ந்த ஒரு சாதாரண மனிதனின் அசாதாரணமான வரலாறு இது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, உலகின் முதல் கம்யூனிஸ அமச்சரவையின் முதல் இவர்! - இப்படிப்பட்ட ஒரு சாதனையாளரான இ.எம்.எஸ். என்ற மாமனிதரை, வரலாற்றின் பக்கங்களில் ஏற்றி வைத்த சம்பவங்களை இதில் நேர்மையுடன் எடை போடுகிறார் அனில்குமார் ஏ.வி.
அவர் மலையாளத்தில் எழுதிய இந்த நூலுக்கு 1996=ஆம் ஆண்டின் கேரள சாகித்ய விருது கிடைத்துள்ளது. புகழுரைகளாக இல்லாமல் சமுதாயத்துடன் வளர்ந்த - வளரத்த தலைவனது வாழ்வின் சிறப்பு இயல்புகளை விவரிக்கும் நூல் இது. அந்தக் காலச் சமூக சூழ்நிலை, அரசியல் நிலை, சமூக மாற்றம் நிகழ்வதற்கான காரண காரியங்கள், அவற்றுக்கான தூண்டுகோல்கள் குறித்தும் இந்த நூல் விவாதிக்கிறது.