படிப்பு மட்டுமே ஒருவரின் திறமையை தீர்மானிப்பதில்லை... அதைத் தாண்டியும் இந்த உலகத்தில் எத்தனையோ விஷயங்களில் திறமை கொண்டவர்கள் இருக்கிறார்கள். வராததைப் பிடித்துக் கொண்டு தொங்குவதை விட தன்னிடமுள்ள திறமையைக் கொண்டு முயன்று முன்னுக்கு வர வேண்டும்... மேகத்துள் வானமாய் ஒளிந்து கொண்டிருக்கும் முகிலனின் திறமையை அவனது மதி எப்படி வெளிக் கொண்டு வருகிறாள் என்பதே இந்தக் கதை... குடும்பம், உறவுகள், காதல், திறமை என முக்கியத்துவம் கொடுத்து சொல்லப்பட்ட கதை.