கதாபாத்திரங்களைப் பற்றிச் சொல்வதானால் இருவருமே ஒரே வார்ப்புதான். வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துச் செல்பவர்கள்தான். சிலவேளை முதிர்ச்சியில்லாதவர்களாய் உங்களுக்கு இவர்கள் தோன்றலாம். ஆனால் வாழ்க்கையின் ஒவ்வொரு கடினமான கல்லையும் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, முதிர்ச்சியாகத்தான் கடந்தாக வேண்டுமா? ஜாலியாகச் சிரித்துக்கொண்டு மற்றவர்களைச் சிரிக்க வைத்துக்கொண்டு கடந்தால் ஆகாதா?