நாம் அறியாத மரபானதொரு பேருலகினை தகிப்பும், உக்கிரமும் ததும்பும் நவீன
மொழியில் பதிவு செய்திருக்கும் யதி, தமிழ் புனைவுலகில்
நிகழ்த்தப்பட்டிருக்கும் ஓர் அசுர சாதனை.
இந்த நாவல் துறவிகளின் வாழ்க்கையை அதன் யதார்த்தத் தன்மையோடும் அதீத
புனைவோடும் ஒருங்கே நம் கண்முன் கொண்டு வருகிறது. நம்மோடு உடன் பயணித்து
ஆனால் கண்ணில் படாமல் இருக்கும் ஒரு வாழ்க்கையைப் படிக்கும்பொது நமக்குள்
எழும் உணர்வுகள் அலாதியானவை இந்தியக் கலாசாரத்தின் நுனி முதல் அடிவரை
ஆழங்கால் பாய்ச்சிய ஒருவரால் மட்டுமே இத்தனை விரிவான ஒரு பிரதியை
யோசிக்கவாவது முடியும் அது பா.ராகவனுக்கு கை கூடியிருக்கிறது.