ஒரு சிறுவன் உண்மையான மார்க்கத்தைத் தேடி தனது பெற்றோரை விட்டு ஓடுகிறான். அறியாத எதிர்காலம், புரியாத உலகை நோக்கி அவன் புறப்படுகிறான். ஆயினும் நம்பிக்கை அவனை வழிநடத்துகிறது, உயர்ந்ததை அடைய வேண்டும் என்ற ஆசை அவனை உந்தித் தள்ளுகிறது. அதன் உச்சமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேரில் கண்டு அவர்களின் தோழராக ஆகிவிடுகிறார். நேர்வழியைத் தேடி அல்லாஹ்வின் பாதையில் புறப்பட்ட அந்தக் கண்ணியத்திற்குரிய நபித்தோழர் ஸல்மான் ஃபார்சீ (ரலி) அவர்களின் வரலாறு ஓர் அற்புத வாழ்க்கைதான்.