ஒரு மனிதன் தன் குறிக்கோளை அடைவதற்கான அரிய கருவிகளாகும் எச்சரிக்கையும் சுறுசுறுப்பும். அவன் எல்லா வேளைகளிலும் வரும் வாய்ப்புகளை பற்றிப் பிடிப்பதற்கு ஆயத்தமாயிருப்பதனால்¸ ஊறு செய்யும் தீமைகளை விரட்டி அடிப்பதற்கு அவன் விழித்துக் கொண்டிருப்பதனால் அவனை யாரும் வெல்ல முடியாது. அவன் தன் குறிக்கோளை அடைந்தே தீருவான்.
சுபிட்சம் என்பது ஒரு வீட்டின் கூரையைப் போலவே. மனிதனின் தலைக்கு மேல் பத்திரமும் பாதுகாப்பும் அளித்துக் கொண்டிருக்கும் கூரையாகும். அந்தக் கூரை விழுந்து விடாமல் நிற்க அறத்தின் அடிப்படையில் நிற்கும் எண்பெரும் தூண்கள் தேவை. அவை
வலிமை¸ சிக்கனம்¸ நேர்மை¸ ஒழுங்கு¸ அநுதாபம்¸ உண்மை¸ பாரபட்சமின்மை¸ தன்னம்பிக்கை ஆகியனவாகும்.