இந்நூல் மொழிபெயர்ப்பு நூல் அல்ல. மூலநூல் ஆசிரியரின் முக்கியமான கருத்துகள் மட்டுமே விளக்குவதற்காக எடுத்துக்கொள்ளப் பட்டன. அந்த விளக்கம் இன்றைய வாழ்க்கைநிலை, இந்திய வாழ்க்கை முறை, தமிழர்களின் தேவைகள் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டே செய்யப்பட்டுள்ளது. அந்த விளக்கத்திற்கு வலுவூட்டவும் சுவையூட்டவும் பெரும் பாலும் தமிழ் எழுத்தாளர்களின் மேற்கோள்களே குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே இந்நூலைத் தழுவல் நூல் என்று கூறுவதும் சிரமம்தான். இது ஓரளவே தழுவி எழுதப்பட்ட நூல் என்று கருதுவது பொருந்திவரும். எனினும் இந்நூலின் அஸ்திவாரம் மூலநூல் ஆசிரியருடையதுதான். அதன் மேல் எழுந்துள்ள கட்டிடத்தைக் கட்டிய கலைஞர் நான்.