இந்தியாவில் ஆத்திகக் கருத்துகள் தோன்றி வளர்ந்த முறையை வேதங்கள், புராணங்கள். வழிபாட்டுமுறைகள், அவற்றின் இலக்கியங்கள் ஆகியவற்றின் வழியாகச் சுருக்கமாக, ஆனால் ஆழமாக எடுத்துரைக்கின்றார் தோழர் எம்.வி.சுந்தரம். அத்தோடு மட்டுமல்லாமல், நேசபக்த நாத்திகமாக விளங்கிய மார்க்சியத்தை, மார்க்சிய நாத்திகத்தை இந்தியச் சூழலுக்கு ஈடுஇணையற்ற வகையில் கையாளுகின்றார். இந்த வகையில் இந்த நூல் 'இந்திய மார்க்சியம்' என்பதற்கு மிக அரிய வகையிலான பங்களிப்பு ஆகும்.