45 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகும் சுப.வீர பாண்டியனின் இரண்டாவது கவிதைத் தொகுதி இந்நூல்.இடையில் ஏறத்தாழ முப்பது நூல்களை எழுதியுள்ளார். அவை அனைத்தும் உரைநடை நூல்கள்.
எனினும் அவ்வப்போது கவிதைகள் எழுதுவதில் அவருக்குள் ஓர் ஆர்வம் இருக்கவே செய்தது. அப்படி அவர் எழுதிய சில கவிதைகளில், கிடைத்த சிலவற்றைத் தொகுத்து வழங்கியிருக்கிறார்.