“மூன்றாவது பத்தில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தால் பத்மனாபனுக்கு முறுக்கு
மாலை போடுவதாக சுள்ளிமேடு கட்டிட மேஸ்த்திரி அறிவித்துள்ளார். முறுக்கு
மாலையோடு பத்து ரூபாயும் தருவதாக இங்கே மேடையில் அறிவித்துள்ளார். அவரது
மூன்றாவது பந்தை சந்திக்க தயாராகிறார் மூர்த்தி, அந்தப் பந்தை தடுத்தாட
முயற்சித்து செந்தில்நாதனிடம் கேட்சாகிறது! செந்தில்நாதன் அதை குட்டியாக்
கரணம் போட்டு பிடித்தேவிட்டார். கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும்
நடக்கலாம் என்பதற்கு இது தான் உதாரணம். பத்மனாபன் பத்து ரூபாயையும்
முறுக்கு மாலையையும் வென்று தான் ஒரு சிறந்த பெளலர் என்று
நிரூபித்திருக்கிறார். தொன்னூறு ரன்களில் மூன்று விக்கெட் என்று நல்ல
நிலையில் இருந்த வின்னர்ஸ் அணி அதே ரன்னில் இப்போது ஆறு விக்கெட்டுகளை
இழந்துவிட்டது! வின்னர்ஸ் அணி நூறு ரன்களைத் தொடுமா?”
ஐம்பத்தேழு சிநேகிதிகள் சிநேகித்த புதினம்