பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களால் அவ்வப்போது
ஈழத்து நாவல். சிறுகதைத் தொகுப்புகளுக்கு வழங்கப்பட்ட முன்னுரைகள் ஒரு தொகுப்பாக
இப்போது நூலுருப் பெற்று வெளிவருகின்றது. இம் முன்னுரைகளுள் பலவும் பொதுவாக
வெளிவருகின்ற முன்னுரைகள் போன்று குறிப்பிட்ட நூல்கள் பற்றி
மட்டும் பேசுவனவாக அமையாமல், ஈழத்தில் புனைகதை இலக்கியத்தின் தோற்றம்,
வளர்ச்சி, மாற்றம் பற்றிய பல விடயங்களையும் அறியத் தருகின்றன. ஒரு சில
முன்னுரைகள். தமிழ்ப்புனைகதை தொடர்பான அடிப்படை விடயங்கள் பற்றியும் அறியத்
தருகின்றன!