எளிமையாகவும் நேரடியாகவும் கதை சொல்வதால், மொழியின் அழகிலும் லாகவத்திலும் சமரசம் செய்துகொள்வதில்லை கி.ரா. 90 களின் ஆரம்பத்தில் தமிழில் வந்திறங்கிய சில இலக்கியக் கோட்பாடுகள் முன்வைத்த வாசிப்பின் இன்பம், மையமற்ற எழுத்து, நேர்கோட்டிலல்லாத எழுத்து போன்ற கருதுகோள்கள் இந்த நூலில் அதற்கு இருபது வருடத்துக்கு முன்பே செயல்பட்டிருக்கின்றன. சமூகவியல் பார்வையும் இலக்கிய விமர்சனமும் கூட்டாக இயங்கி உருவாக்கும் கோட்பாடுகளை விடவும் படைப்பாளியின் நுண்ணுணர்வு மேலாண்மை கொண்டது என்பதும் உறுதி செய்யப்படுகிறது.