மருத்துவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர், சுருளிமலை கருணானந்தர் என்ற சித்தர் மூலம் கொடிய பிணிகளை நீக்க வல்ல மருந்துகளைப் பற்றி அறிந்து அவற்றைத் தயாரித்தார். இதனால் ஆசிரியப் பணியை விட்டு விட்டு மருத்துவராகச் செயல்பட்டார். சோதிடக்கலை வல்லுநராகவும், தலை சிறந்த விவசாயியாகவும், புகைப்பட நிபுணராகவும், இறையன்பராகவும், அச்சுக்கலை வளர்த்த வித்தகராகவும், இசைத் தமிழ் ஆய்வினைத் தொடங்கி வைத்தவராகவும், இயலிசைப் புலவராகவும் விளங்கினார். தஞ்சையில் சோதிட விமர்சின சபை, லாலி அச்சகம்,கருணானந்தர் சஞ்சீவி மருந்து நிலையம்,கருணானந்த புரம் என்ற பண்டிதர் தோட்டம், சங்கீத வித்தியா மகாஜன சங்கம் என்ற அமைப்புகளை ஏற்படுத்திச் செயல்படுத்தினார்