ஒரு குக்கிராமத்தில் பிறந்து மாட்டு வண்டியில் பயணம் செய்தவர். இந்தியாவின் முதல் மலிவுக் கட்டண விமான நிறுவனத்தின் தலைவராக உயர்ந்த கதை இது. இதனால்தான் இந்நூலை கல்லூரிகளில் பாடநூலாக வைக்க வேண்டும் என்கிறார் அப்துல் கலாம்.
சாமானியக் கறப்னைக்கு எட்டாத பல சாகசங்களை கோபிநாத் அநாயாசமாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். அவர் ஈடுபடாத துறைகளே இல்லை. இந்திய ராணுவ அதிகாரியாக பங்களாதேஷ் விடுதலைப் போரில் மிக மிக்குயப் பங்காற்றியிருக்கிறார். இந்திய சீன எல்லையில் தனியே காவல்பணி புரிந்திருக்கிறார். விவசாயம் செய்திருக்கிறார். பால் பண்ணை, பட்டு பூச்சி வளர்ப்பு, மோட்டார் பைக் ஏஜென்ஸ், உடுப்பி ஹோட்டல், பங்குச் சந்தை என்று நீள்கிறது பட்டியல். அரசியலும் உண்டு. தேவே கவுடாவை எதிர்த்து பிஜேபி சார்பில் போட்டியிட்டிருக்கிறார். தோல்வியும் அடைந்திருக்கிறார்.
பூஜ்யத்திலிருந்து ராஜ்யத்தைப் படைக்கத் தூண்டும் அனைவரும் படிக்கவேண்டிய பல பாடங்கள் இதில் உள்ளன. எனவேதான் 'கல்லூரிகளில் இந்நூலப் பாட நூலாக்க வேண்டும்!' என்கிறார் அப்துல் கலாம்.