மனஎழுச்சி ஊட்டும் தருணங்களை வாழ்க்கை எவ்விதமான வேறுபாட்டுணர்வுமின்றி வழங்கிக்கொண்டே இருக்கின்றது. அதன் அலைவரிசையில் நின்று அவற்றை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்தருணங்கள் மிகவும் உயிர்ப்பானவை. பரவசம் ஊட்டுபவை. பார்த்தவற்றிலும் படிப்பவற்றிலும் நம் வாழ்வைச் சுற்றி ஒளியூட்டியபடியும் நம்முடன் உரையாடியபடியும் எங்கெங்கும் நிறைந்திருக்கிற அந்த ஊற்றுக்கண்களைத் தேடி இணைவது மகத்தான இன்பம்.