டாக்டர் அம்பேத்கர் தீண்டாமையைத் தீரத்துடன் எதிர்த்தவர். மக்களிடையே பிறப்பினால் ஏற்றத்தாழ்வு பாராட்டுவதை அறவே வெறுத்தவர்.சமுதாயத்தில் நிலவும் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் காரணமாக உள்ள சாதி,மத வேறுபாடுகளை ஒழித்தால்தான் நாடும் மக்களும் முன்னேற்றம் காணமுடியும் என்றார். தீண்டாமை தவறு என உணர்கிறான். எனினும், பகிரங்கமாக இது குறித்து விவாதிப்பதற்கு வெட்கப்படுகிறான்.இதில்வேதனைக்குரிய ஆச்சரியம் என்னவென்றால், சமூக அமைப்புகளைப் பற்றி ஆராய்ந்து வரும் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை தீண்டாமைப் பிரச்சனை ஈர்க்கத் தவறிவிட்டதேயாகும் என்றார் டாக்டர் அம்பேத்கர்.1947 ஆகஸ்ட் 15-ஆம் நாள் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து
விடுதலை அடைந்தது.அரசியல் அமைப்புச்சட்ட வரைவுக்குழுவின் தலைவராக டாக்டர் அம்பேத்கர் தேர்வு சொய்யப்பட்டார். 'தீண்டாமை' அரசியல் சட்டம்17வது பிரிவின்படி நீக்கப்பட்டுவிட்டது.பேச்சும்- எழுத்தும்'நூல் தொகுப்பில் தொகுதி 9,14,25-டாக்டர் அம்பேத்கர் அவர்களால் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னால் 'தீண்டாமையின் கொடுமையைப் பற்றிஎழுதிய பல கட்டுரைகளைக் காண முடிகிறது.
- மு.நீலகண்டன்