இவான் ; போரைப் பற்றி அறியாத மக்கள் இந்நூல் திகைக்க வைக்கும். தனது வீட்டுப் பாடங்களைச் செய்வதும்
தனது நண்பர்களுடன் விளையாடுவதுமாக இருந்த பள்ளி சென்ற சாதாரணப் பையன், போரின் கடுஞ்சோதனைக்கு
ஆளாகி ஒரு போர்வீரனைப்போல மடிகிறான் - இதை அவர்கள் உண்மையானது இல்லை என்றே கருதுவார்கள்.ஆனால் இந்நூலின் முக்கிய கதாபாத்திரம் பற்றி - இவான் என்ற ருஷ்யப் பையனைப் பற்றி - நாம் அறியக்கூடிய எல்லாமே உண்மைதான். இன்னும் அதிகமாகச் சொல்லப் போனால் இச்சிறுகதையானது மிகப்பெரிய பேரிடர் பயக்கத்தக்க ஒர் உண்மையின் ஒரு பகுதி அசாதாரணமான வீர வரலாற்றின் ஒரு பக்கம். போரில் குழந்தைகள் என இது அழைக்கப்படுகிறது. இம்மாதிரியாகத்தான் சோவியத் யூனியன் மீதான பாசிச ஜெர்மனியின் போர் மிகவும் கொடுமையானதாக இருந்தது. மனித குல வரலாற்றிலேயே மிக அவலதானதாக இருந்தது. குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டி, அவர்களை மிகவும் பின்கோடிக்கு அனுப்புவதிலும் , ராணுவ நடவடிக்கைகளே இல்லாத பாதுகாப்பான தொலைதூரத்து இடங்களுக்கு அனுப்புவதிலும், எங்கள் மக்கள் அளப்பரிய முயற்சிகள் மேற் கொண்டிருந்தார்கள். முதலாவதாக குழந்தைகள் அனுப்பப்பட்டார்கள் . அவர்களுக்கு வாகனங்களும் விமானங்களும் கொடுக்கப்பட்டன.
- யூரி யாகவ்லெவ்.