book

பஞ்ச தந்திர கதைகள்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பட்டத்தி மைந்தன்
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :4
Published on :2012
Add to Cart

ஒவ்வொரு முறையும் இப்படி கழுதை விழுந்து எழ உப்பு கரைந்து நீரில் சென்றுவிட வியாபாரிக்கு பெருத்த நஷ்டம் ஏற்படத் துவங்கியது. ஏதேதோ யோசித்த வியாபாரி கடைசியில் இது கழுதையின் தந்திரம் என்பதைப் புரிந்து கொண்டார். ஒரு நாள் வழக்கம்போல் முதுகில் மூட்டையை ஏற்றி கழுதையை நடத்திச் சென்றார். ஆறு வந்தது. வழக்கம்போல் கழுதை ஆற்றில் விழுந்து எழுந்தது. ஆனால் அன்று வழக்கமாக சுமை குறைவதற்கப் பதிலா மிக அதிகமாக சுமை கூடியது. அதற்குக் காரணம் கழுதைக்குப் புத்தி புகட்ட அந்த வியாபாரி அன்று உப்பிற்குப் பதில் பஞ்சை ஏற்றி இருந்தார். பஞ்சு நீரில் நனைந்ததும் அதன் எடைகூடி கழுதையைத் தடுமாறச் செய்தது. அன்று கழுதையும் புரிந்து கொண்டது நாம் என்றும் உணவளித்து நம்மைக் காத்து வரும் முதலாளிக்குச் செய்தது துரோகம் என்று உணர்ந்தது. அதன்பின் கழுதையும் வியாபாரிக்கு உண்மையாக நடந்து கொண்டது.