book

நன்மையைத் தேடி

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜனகன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2001
Out of Stock
Add to Alert List

நல்ல எண்ணங்கள் நன்மையைத் தரும் இது என்னுடைய வாழ்வில் நான் மிகவும் நம்புகின்ற ஒரு வார்த்தை. எனக்கு அறிமுகமான எல்லோரிடத்திலும் ஒரு பத்து முறையாவது சொல்லியிருப்பேன்.
நன்மையானது எது? எவனொருவனுக்கு ஒன்று அவன் தேவையைப் பூர்த்தி செய்கின்றதோ, அவன் பிரச்சனைக்குத் தீர்வாக அமைகிறதோ? இன்பம் தருகிறதோ? அது நன்மை. அப்படிப் பார்த்தால் எல்லோருக்கும் நன்மை எளிதில் கிடைப்பதில்லை. அதைத் தேடி , நாடி ஓடி அடைய வேண்டியதாயிருக்கிறது. ஏனெனில் எளிதில் கிடைக்கும் எந்தப் பொருளும் இன்பம் தருவதில்லை. மாறாக கஷ்டப்பட்டு , உழைத்துப் பெறும் பொருள் தான் மன நிம்மதியும் நிறைவும் தருகின்றது. இன்று நாம் கொண்டாடி மகிழும் தூய லூர்து அன்னையின் திருவிழா கூட பெர்னதெத் என்ற சிறுமியின் கடின முயற்சியின் பலன் தான் . அன்னை மரியாள் இவருக்கு 18 முறை காட்சியளித்திருக்கிறார். நன்மையைத் தேடி நாடி ஓடியதால் அவர் பெற்ற பரிசு இது. அவர் மட்டும் அன்னை மரியாள் காட்சியின் போது ஏதோ ஒர் வெளிச்சம் தானே, சப்தம் தானே என்று அலட்சியப்படுத்தி இருந்தால், இன்று இந்த திருவிழா கொண்டாடி இருக்க முடியுமா?. முடியாது. சிறுமி பெர்னதெத் சொன்னவுடன் யாரும் நம்பவில்லை.