குழந்தைகளுக்குப் பெற்றோரிடம் பிறவியிலேயே அன்பு ஏற்பட்டு
விடுவதில்லை; அதைக் குழந்தைகளிடம் ஏற்படுத்துவது பெற்றோருடைய பொறுப்பாகும்;
பெற்றவர்களைப் போலவே வளர்ப்பவர்களும் அன்பைப் பெற முடியும்;
குழந்தையினிடம் நாம் பரிவு காட்டினால் அது நம்மிடம் அன்பு கொள்கிறது; எனவே
தானாக ஏற்பட்டுவிடுமென்று இருந்துவிடாமல் அதை வளர்த்துப் பெருக்க ஆவன செய்ய
வேண்டும். பெற்றோர் குழந்தையை வேண்டாததாகக் கருதினாலோ, சற்று இவப்புடன்
நடத்தினால் குழந்தை அதனை உணர்ந்து கொண்டு விடுகிறது. வெறுப்பு, வெறுப்பையே
வளர்க்கும்; தங்கள் குழந்தைகளை வெறுக்கக்கூடிய பெற்றோர்களும் இருப்பார்களா
என்று கேட்கலாம். குழந்தைகள் அப்படித்தான் கருதுகின்றன; பெற்றோருக் கும்
அன்பு இருக்கிறதென்பதைக் குழந்தை உணரும்படி செய்யாததே அதற்குக் காரணம்.
சிறு குழந்தையிலிருந்தே தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சியிருந்தால் இம்மாதிரி
எண்ண இட மேற்பட்டிருக்காது; தூக்கி வைத்துக் கொள்வதும் கொஞ்சுவதும்
தவறென்று கருதுவோரும் உண்டு. இதனால் குழந்தையின் வளர்ச்சி தடைப்படு மென்பது
அவர்கள் வாதம்; இது தவறாகும்.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தாயும் குழந்தையும், சரோஜா, Saroja, Pengal, பெண்கள் , Saroja Pengal, சரோஜா பெண்கள், மெய்யம்மை நிலையம், Meyyammai Nilayam, buy Saroja books, buy Meyyammai Nilayam books online, buy tamil book.