book

உலராத ரத்தம் - என்றாவது ஒரு நாள் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

₹260+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :ஆர்.கே. பப்ளிஷிங்
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :217
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789390771875
Add to Cart

இந்த கதை 1987 ஆம் ஆண்டு தாய் என்ற வார இதழில் வெளிவந்தது.

ரத்தத்தைத் தொட்டு கிழக்கு திசைக்கு யாரோ பொட்டு வைத்துவிட்ட மாதிரி வானத்தின் அடிவயிற்றில் சூரியன். மௌனமாக அந்த புதன்கிழமை பிறந்தது. விநாடிகளை தின்று  வளர ஆரம்பித்தது, ரோட்டோர  புளிய மரங்களில் பறவை சமாச்சாரங்கள் எச்சமிட்டு கத்தி மரத்துக்கு மரம் பறந்து கொண்டிருக்க,

ஹைவேஸ் டிபார்ட்மெண்ட் சிரத்தையாய் போட்டிருந்த அந்த கான்க்ரீட் ரோட்டில், ஈரத்தரையில் விழுந்துவிட்ட சோப்புக் கட்டியாய் வழுக்கிக் கொண்டிருந்தது ருத்ரமூர்த்தியின் நீலநிற பென்ஸ் கார்.