book

விஞ்ஞானத்தின் கதை

Vingnaanaththin Kadhai

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செந்துறையான்
பதிப்பகம் :சசி நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

சகோதரர்கள் இருவர் தெருவில் கிடக்கும் துருப்பிடித்த இரும்புத் துண்டுகளையும், எலும்புத் துண்டுகளையும் பொறுக்கி விற்று வாழ்க்கை நடத்தி வந்தனர். அதன் பிறகு பல தொழில்களில் ஈடுபட்டனர். ஆனால், தோல்வியே மஞ்சியது.

ஒரு நாள் அவர்களில் ஒருவன் லைப்ரரிக்கு சென்றான். அங்கு ஒரு சுவாரசியமான கதை ஒன்றைப் படித்த அவனுக்கு, பொறிதட்டியது. அந்தக் கதையில் ஒரு மனிதன் இறக்கைகள் எதுவும் இல்லாமல் காற்றாடி போன்ற ஒன்றின் துணையால் வானில் பறப்பது போல சித்தரிக்கப்பட்டிருந்தது.

அதைப்படித்த உடனே தானும் அவ்வாறு ஏன் பறக்கக்கூடாது? என்ற எண்ணம் ஏற்பட்டது. அதே சிந்தனையுடன் வந்து தனது சகோதரனிடம் அந்த எண்ணத்தைத் தெரிவித்தான். இருவரும் விண்ணில் பறப்பது பற்றி தீவிரமாகச் சிந்தித்து, பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர்.

கடுமையாக முயற்ச்சிகளுக்குப் பின்னர் வானில் பறக்க ஒரு எந்திரத்தைக் கண்டுபிடித்தனர். அதன் உதவியால் 1903-ம் ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி வெற்றிகரமாக வானில் பறந்து சாதனை படைத்தனர். தங்களுடைய விடாமுயற்சியால் விந்தை புரிந்த அவர்கள் தான் “ரைட் சகோதரர்கள்.”