நீங்கள்
ஒவ்வொருவரும் மனதில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பீர்கள்.
பெயரும் புகழும் வர வேண்டும், எல்லோருக்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழ
வேண்டும், கற்ற கல்விமானாக இருக்க வேண்டும், உழைப்பால் உயர்ந்து
சாதனையாளனாக வேண்டும் என்று பல கனவுகளை நீங்கள் சுமந்து கொண்டிருக்கலாம்.
ஒரு காலத்தில் நம்மை ஏளனமாய்ப் பேசியவர்கள். இன்று மூக்கில் விரல் வைத்து
ஆச்சரியப்படும்படியாக உயர்ந்து காட்ட வேண்டும் என்று நினைத்துப்
பார்ப்பவர்களா நீங்கள்? உங்களுக்கு இந்நூல் மிகச் சிறந்த வழிகாட்டியாக
அமையும். இந்நூலாசிரியர் எஸ். சந்திரசேகர் இயற்பியலிலும் மேலாண்மையிலும்
முதுகலைப் பட்டம் பெற்றவர். தற்சமயம் மனித வளத் துறை பயிற்சியாளராக
சென்னையில் பணிபுரிகிறார். சுமார் 20 வருட பணி அனுபவம் பெற்ற இவர்
சுயமுன்னேற்றம். மென்திறன் பண்புகள், வர்த்தகம் மற்றும் ஆன்மிகம் தொடர்பான
பல கட்டுரைகளையும் சில புத்தகங்களையும், தமிழிலும் ஆங்கிலத்திலும்
வெளியிட்டுள்ளார்.