உலகில் அன்றாடம் எத்தனையோ சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் காலப்போக்கில் மறைந்து விடுகின்றன. சில சம்பவங்கள் நின்று நிலைத்து உலகம் உள்ளளவும் சரித்திரம் படைக்கின்றன. அப்படி உலகில் சரித்திரம் படைத்த விஷயங்களில் பெரிய சம்பவங்கள் எது என்பதைத் தேடிக் கண்டுபிடித்து ஒரு புத்தகமாக எழுதவேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாளாக என் மனதில் இருந்து வந்தது.