மனிதனின் மிருக குணத்தையும், தெய்வ குணத்தையும் ஒப்பிட்டு கவியரசு அவர்கள்
கூறிய தத்துவம் ஒவ்வொருவர் உள்ளத்தையும் தொடும். மனித வாழ்வு மேம்பட இது
போன்ற கருத்துக்களைத் தொகுத்து 'தத்துவ முத்துக்கள்' என்ற இந்த நூலைக்
கொடுத்துள்ளேன். இதில் உள்ள ஆயிரத் தெட்டு கருத்துக்களில், ஒரு கருத்து
யாரையேனும் ஒருவரை மகானாக உருவாக்கலாம் என்ற எண்ணம் எனக்கு உண்டு.
அறிஞர்கள் அனுபவத்தில் உணர்ந்த கருத்துக்களையே தத்துவங்களாகக்
கொடுத்துள்ளார்கள். நாம் அனுபவப்பட்டு உணர்வதைவிட, அனுபவப்பட்டவர்களின்
கருத்து நமக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.