எல்லாம் ஒன்றே என்ற விஸ்தாரமான வேதாந்தத்தைக் கதைத்துக்கொண்டிருந்தாலும்,
நமது மன வரம்பை ஒட்டுத் திண்ணை எல்லைக்கு வெளியேவிட விருப்பமில்லாமல்
இருப்பவர்களும், உலகத்தில் சொல்லவேண்டியதையெல்லாம் மூவாயிரம்
வருஷங்களுக்கு முன்பே கங்கைக்ரையிலும் காவிரிக்கரையிலும் சொல்லி
முடித்துவிட்டதாக மமதை கொண்டிருக்கும் அரிசி உணவை உட்கொள்ளும்
பிராணிகளும் தங்கள் மனோரதத்தைச் செலுத்தியாவது தேசயாத்திரை செய்து
பார்க்கப் பிற நாட்டு இலக்கியப் பயிற்சியளிப்பதே இத்தொகுப்பின் நோக்கம்.
புதுமைப்பித்தன்.