இலக்கியக் கோட்பாடுகளுக்கு வெளியில் நின்று கரிசல் கிராமிய, குறு நகரிய விளிம்பு நிலை மக்களின் வாழ்வை, தலித்களுக்கு திணிக்கப்பட்ட வாழ்வை நுட்பமாக தெளிவான எழுத்தாக்குகிறார். வஞ்சிக்கப்பட்ட பெண்கள் மூர்க்கமாக எழும்போது வாசகனும் அந்நிலை எட்டுகிறான். சிறுகதைக் கட்டமைப்பு செய்பாடு குறித்த முனைப்பற்ற இக்கதைகள் காட்டு மரங்களின் வீர்யத்துடன் தண்மையும் திண்மையுமாய் தனித்த படைப்பாக நிற்கின்றன.