பொதுவாக நகைச்சுவை என்று சொல்லப்படும் சுவையான மனித உணர்ச்சி இது. இந்த இனிய உணர்ச்சி, நவரசங்களில் முதலிடம் பெறுகிறது.இதில் சிரிப்பு,கேலி, கிண்டல், விகடம், பகடு எல்லாமே அடக்கம். இதை விரும்பாத ஒருவன் இருப்பானேயானால, அவன் மனித தன்மையற்றவனாகத்தான் இருக்க முடியும்.நகைச்சுவையுணர்ச்சி நிரம்பப் பெற்றவர்கள் புத்திசாலிகள் மற்றும் அதிர்ஷ்டசாலிகள்.