'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்று கூறுவார்கள். ஆகையால் ஆரோக்கியம் குறைவு இல்லாமல் இருக்க வேண்டுமாயின் மனநிறைவுடன் சிரிக்க வேண்டும். வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது பழமொழி வயிறு குலுங்கச் சிரிப்பதினால் நமது உடலில் நோய்களே அணுகாது என்று உடற்கூறு அறிஞர்களும் கூறுகின்றனர். உடல் குலுங்கச் சிரிக்கும்போது உள்ளம் மகிழ்வடைவதுடன் உடல் தசைகள் விரிவடைந்து புத்துணர்வு பெறுகின்றன.