இந்தத் தொகுப்பின் சிறப்பு என்னவெனில், எல்லாக் கட்டுரைகளும் நாகரிகத்தையும் பண்பாட்டையும் சொல்லித் தருகின்றன. குடும்ப நிகழ்ச்சி, அலுவலக நடவடிக்கை ஆகியவற்றை விவரித்து, மற்றவர்களும் தானும் அன்றாட வாழ்க்கையில் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டி, எப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறியிருக்கிறார். குறிப்பாக, படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருக்கும் பிள்ளையைக் கிண்டல் செய்வது எவ்வளவு தப்பு என்று கூறும் கட்டுரையும், டயரி எழுதுவதில் உள்ள பயனையும் மகிழ்ச்சியையும் கூறும் கட்டுரையும், வசதி இருந்தபோதும் வயோதிகப் பெற்றோர்களைக் கவனிக்காமல் விடுகிற பிள்ளைகளைக் கண்டிக்கும் கட்டுரையும் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன.