திருமதி சுனிதா பூபாலன் அவர்கள் வாழ்வியல் உண்மைகளை சிறு சிறு நீதிக் கதைகளாக எடுத்துரைத்துள்ளார். பயிலும் மாணவர்கள் சோர்வடையாதபடி இறுதிவரை சுறுசுறுப்பாக கதையம்சத்தை கொண்டு செல்கிறார். இச்சிறுகதைகளின் மூலம் ஆசிரியர் தான் சொல்ல வந்த கருத்தை நெஞ்சில் பதியும் வண்ணம் அழுத்தமாகச் சொல்லியுள்ளார். இதன்மூலம் மாணவர்களின் அறிவை மேலும் ஆழமாகவும், அகலமாகவும் கூர்மையாகவும் ஆக்க விரும்பியுள்ளார்.