சாதி, சமயம், மொழி, இலக்கியம் என்ற வெளிகளில், பன்முகப் பட்ட பாரம்பரியங்களின் ஒரு முழுமையான வெளிப்பாடாகச் சமுதாயத்தை இனங்காட்டுகிறது பண்பாடு. தமிழ்ச் சூழலில் அதன் முகங்காட்டுகிறது இந்நூல்.
பரந்த வெளியில் காற்றாட ஒரு நடை கண்களுக்குள் நின்றதெல்லாம் இதழ்களாய் விரிகின்றன. புள்ளிகளைத் தாண்டி வண்ணத்துகள்கள். போகிற பாதையெல்லாம் கோலம்தான்.
தமிழின் அடையாளம் குறித்த ஒரு பயணம்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,போலந்து -வார்சா பல்கலைக்கழகம் - இவற்றில் தமிழ்ப்பேராசிரியராய் பணியாற்றியவர்.
திறனாய்வு, பண்பாடு, த்த்துவம் முதலிய தளங்களில் தம்மை அடையாளங்காணுகிற தி.சு.ந., இவற்றில்தொடர்ந்து எழுதவும் செயல்படவும் கூடியவர். சமுதாய மாற்றங்களில் நம்பிக்கை கொண்டவர்.