தமிழாசிரியர் தாம் கற்பிக்க எடுத்த்துக்கொண்ட பாடப்பகுதியை மாணவர்கள் நன்கு புரிந்துகொள்ளும் வகையில் அவர்கள் புரிந்துகொள்ளும் திறனுக்கு ஏற்ப விளக்கி உரைத்தல் விரிவுரை முறையாகும்.
இம்முறைமூலம் தமிழாசிரியர். (1) மாணவர்கள் கற்பனவற்றை வகைதொகை செய்கின்றார் (2) வாய்மொழியாகப் பாடக்கருத்துகளை வெளியிடுகின்றார்.(3) மாணவர்களின் முன்னறிவு, ஆர்வம், புரிந்துகொள்ளும் திறன் போன்றவற்றிற்கு ஏற்றவாறு பாடப்பொருளுக்கேற்ற எடுத்துக்காட்டுகளைத் தருகின்றார்.