தமிழ்மகன் தமிழ்த் திரைப்படத் துறைக் கலைஞர்கள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் இந்தக் கட்டுரைகள் உயிரோசையில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஊடக வெளிச்சத்திற்கு அப்பால் இந்தக் கலைஞர்களின் நிஜமான முகங்களையும் இதயங்களையும் காட்டும் குறிப்புகள் இவை. சினிமா உருவாக்கும் பிம்பங்களைக் கடந்த, மறக்க முடியாத, நெகிழ்ச்சியூட்டும், நுட்பமான தருணங்களை தமிழ்மகன் மிகச் சுவாரசியமான நடையில் எழுதிச் செல்கிறார்.