பிச்சமூர்த்திக்கு இந்த தமிழ் அரசாங்க இலக்கியப் பரிசும், சாஹித்திய அக்காடமிப் பரிசும், ஞான பீடப் பரிசும் கிடைக்கவில்லை. அதுவும் ஒரு தனிபெருமை என்று சொல்ல எனக்குத் தோன்றுகிறது. பரிசு தரும் ஸ்தாபனங்களுக்குச் சிறுமை தரும் விஷயம் அது. பாராட்ட வேண்டிய விஷயம். பிச்சமூர்த்திக்குக் கிடைக்காத பரிசு தனக்கு கிடைத்ததாக எவன் பெருமைப்பட்டுக் கொண்டாலும் அவன் உண்மையில் தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடோ பக்தியோ உள்ளவன் என்று சொல்லத் தகுதியற்றவன்.