உலகம் வளர வளர, விஞ்ஞானமும் வளர்ந்துக்கொண்டே செல்கிறது. அறிவியல் வளர்ச்சியினால் பாதிக்கப் படுவது மக்கள்தான் . விஞ்ஞானம் வளருவதால் எந்த அளவுக்கு முன்னேற்றம் இருக்கிறதோ அந்த அளவுக்கு பாதிப்புகளும் இருக்கின்றது. நம் உடல் நிலையில் ஒரு ஏதாவது ஒன்று பாதிக்குள்ளானாலும் நம்மால் ஒரு வேலைக்கூட செய்ய முடியாது. இந்த உடல்நிலை பாதிப்புக்கு என்ன காரணம் என்று பார்த்தால் கலப்படமே இருக்கிறது. இப்படிப்ட்ட பொருட்களை பயன்படுத்துவதாலும் உண்ணுவதாலும் உடல் நிலை பாதிக்கப்படுகிறது. உடல் நிலை பாதிக்கப்பட்டால் உடனே நாம் மருத்துவரை அணுகுவோம். அவர் செய்யும் சிகிச்சையையும், தரும் மருந்து மாத்திரைகளையும் சாப்பிட்டு உடலை பாதுகாத்துக்கொள்கிறோம். மருத்துவர் தரும் மருந்தும் மாத்திரைகளும் ஒரு வாரத்துக்கும் ஒரு மாதத்துக்கும் இல்லை சில மாதங்களுக்கும் தொடர்ந்து சாப்பிட வேண்டும் என்று சொல்லுவார்கள். தமிழ் மருந்துகளை அணுகினால் அவர்கள் சொல்லும் வைத்தியமும் இதே போன்ற நிலையில், இந்த சூரணத்தை தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் ,இந்த உருண்டையை ஒரு வாரத்துக்கும், இந்த பொடியை உணவில் சேர்த்து இரண்டு வாரத்திற்குஙம் என்று மருத்துவ சிகிச்சைகளை நீட்டிக்கொண்டே இழுத்து செல்கின்றன. இந்த விஞ்ஞான வளர்ச்சியில் எதைச்சொல்வதென்றாலும், செய்வதென்றாலும் சுருக்கமாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.
- பதிப்பகத்தார்.