அறிவின் துணை கொண்டு எந்தெந்த கிரகங்கள் எங்கு உள்ளன. அவற்றின் ஒளி அலைகளால் பூமியில் உள்ள ஜீவராசிகளின்
வாழ்க்கைமுறை எவ்வாறு அமைகிறது. அவைகளின் ஆயுள்கால அளவு போன்றவற்றை மிக துல்லியமாக கணித்து வகுத்துக்
கொடுத்துள்ளனர். நவகிரகங்களில் சூரியன் தான் முதன்மையானது என்பது நாம் அறிந்த ஒன்றாகும். அந்த சூரியனை சுற்றி வலம் வரும் ஏனைய கிரகங்களான புதன், சுக்கிரன், குரு, சனி, செவ்வாய் இராகு, கேது அகியவைக்ளும், அந்த சூரிய ஒளியைப்பெற்று, அந்த ஒளியை 'ரிப்லெக்ட்' எனப்படுகிற மறுஒளிவீச்சு மூலமாக பூமிக்கும், அதை சார்ந்த உயிரினங்களுக்கும் வழங்கி, அந்தந்த காலக்ட்டத்தில் அவையவைகளின் தன்மைக்கேற்ப பலன்களை வழங்கி வருகின்றன. நாம் நன்கு உழைக்க வேண்டும். அதே சமயம் சோதிடம் கூறும் நேரகாலங்களை அனுசரிப்பதோடு, நல்லது கெட்டதுகளை, நன்மை தீமைகளை, சாதகபாதகங்களை ஏற்றதொரு பரிகாரங்களின் மூலம் விலக்கி, அறிவு பூர்வமாக உணர்ந்து செயல்படுத்தி வரவேண்டும். அது தான் புத்திசாலித்தனமான செயல், அப்போதுதான் நாம் வாழ்க்கையில் பொருளாதாரத்திலோ, மற்ற வகையிலோ ஏற்ற தாழ்வுகளைக் கண்டாலும் என்றும் ஓரே சீராக வாழ்வை அனுபவிக்க முடியும். அந்த வகைக்கு ஏற்ப இப்புத்தகத்தில் நமக்கு ஏற்ற நல்ல நேரங்களும், வெற்றியை வழங்கக் கூடிய உன்னதமான நேரங்களும் கணக்கிடப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன. இவை களை நாம் முறையோடு பின்பற்றி நடந்து கொண்டாலே நமக்கு தினமும் வெற்றிமேல் வெற்றிதான். பல நன்மை தரும் காரியங்களை சாதித்து கொள்ளலாம்..
- ம.சு. பிரம்மதண்டி.