மறைமலையடிகளின் ' அறிவுரைக்கொத்து ' என்னும் இந்நூல் .அவர் வாழுக் காலத்திலேயே பல பதிப்புகள் கண்டு , சமூகத்தில்
பல அலைகளை உண்டாக்கி, நல்மாற்றங்களுக்கு வித்திட்ட நூலாகும். அப்படிப்பட்ட இந்த அரிய நூலை நம் தலைமுறையினரும் கற்றுணர வேண்டும் என்னும் நோக்கத்துடன் இப்போது நாங்கள் மறுபதிப்புச் செய்திருக்கிறோம். மறைமலையடிகளின் முக்கியமான நூல்களையெல்லாம் மறுபதிப்புச் செய்வதற்காக வகுப்பும், தொகுப்பும் செய்து வைத்திருக்கிறோம். தமிழ் பற்றியும், சைவம் பற்றியும் தனித் தொகுப்பு நூல் வெளியிட இருப்பதால், இந்நூலின் முந்தைய பதிப்புகளில் இடம் பெற்றிருந்த சைவ சமயப் பாதுகாப்பு' தமிழிற்பிறமொழிக் கலப்பு ' தனித்தமிழ் மாட்சி' என்னும் மூன்று கட்டுரைகள் இப்பதிப்பில் இடம் பெறவில்லை. இத்தகைய நூல்களை வாங்கிப் படித்தும், இளைஞர்களைப் படிக்கச் செய்தும் எதிர்காலச் சமுதாயத்தினரை ஏற்றம் பெறச் செய்வீர்கள் என்று நம்புகிறோம்.
- பதிப்பகத்தார்.