ஜோதிட நெஞ்சங்களுக்கு வணக்கம். ஜோதிடம் மிகப்பெரிய கடல். அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத நீங்காத இடம்
பெற்றுவிட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதற்கு நாடு, மதம், மொழி என்ற எந்தவிதப் பாகுபாடும் இல்லை. ஜோதிடம் ஏதோ மாயாஜால வித்தை அல்ல. அது முற்றிலும் கணிதம், விஞ்ஞானம் இணைந்த ஒரு தெய்வீக்க் கலை. ஒவ்வொருவர் வாழ்விலும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதன் பங்கை ஆற்ற அது தவறுவதில்லை என்பதை நினைவில் நிறுத்துக. எல்லாம் வல்ல இளம்பூரணன் எம்மான் முருகப்பெருமானது குருவருளினாலும், அன்னை புவனேஸ்வரியின் வற்றாத கருணையினாலும் நவகோள்களின் நல்லாசியினாலும் இந்த திருமணப்பொருத்தமு பார்க்க சிறந்த முறைகள் என்ற நூலைப் படைத்துள்ளேன். எல்லாருக்கும் புரிய வேண்டும் என்பதனால் மிகவும் எளிய நடையில் அன்போடு 30 தலைப்புகளில் தரப்பட்டுள்ளன. படித்து இன்புற அன்போடு வேண்டுகிறேன். இந்த நூலை மிகவும் ஆர்வமும் அன்பும் மேலோங்க வெளியிடும் கற்பகம் புத்தகாலயம் உரிமையாளர் திரு. நல்லதம்பி அவர்களுக்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள்.
- முருகடிமை துரைராஜ்.