படித்தவர்களுக்கு மட்டுமல்லாது பாமர மக்களுக்கும் கொலஸ்ராலினால் ஏற்படும் கெடுதல்கள் அதனைத் தவிருக்கும் முறைகளோடு, கொலஸ்டிராலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வழி முறைகளை எளிய நடையில் விளக்கியுள்ள திறம் மிகவும் அற்புதம். இதை எல்லோரும் படித்து இதயம் காப்போம் என்று நூலாசிரியர் மிகத் தெளிவாக்க் குறிப்பிட்டுள்ளார்.
அற்புதத் தமிழ் நடையுடன் முயன்று திரட்டிய முத்தான தகவல்கள் நிரம்பிய இந்நூல், இயற்கையின் இனிய தரங்கம்; எடுக்க எடுக்கக் குறையாத மருத்துவக் தமிழ்ச்சுரங்கம்.
- டாக்டர் ஜி. மூர்த்தி, MD:D.M;
இந்த நூல் டாக்டர் நரேந்திரன் எழுதியுள்ள பல நன்னூல்களில் மிகவும் போற்றத்தக்கதாகும். இந்நூல் வழி நடந்தால் இறப்பின் பிடியிலிருந்து மனித குலத்தைதக் காப்பாற்ற முடியும். ஒரு குடும்பத் தலைவனைக்காப்பாற்றுவது ஒரு குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு நிகரன்றோ? எனவே இந்நூலைக் காலத்திற்கேற்ற காவியம் என்று போற்றி எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களை காணிக்கையாக்குகின்றேன்.
மருத்துவர் தி. செந்தில்குமார், M.S.,M.Ch.
இதய, நுரையீரல் அறுவை சிகிச்சை மருத்துவர்