உலகப் புகழ்பெற்ற சிறுகதைகளை அறிமுகம் செய்யும் இக்கட்டுரைகள் எழுத்தின் நுட்பங்களையும் அழகியலையும் நமக்கு கற்றுத்தருகின்றன. ஒரு இளம் வாசகன் அல்லது இளம் எழுத்தாளன் இந்தக் கட்டுரைகளின் வழியே சிறுகதையின் நுட்பங்களை எளிதாக அறிந்து கொள்ளலாம். வடிவத்தில் சோதனைகளைச் செய்த கதைகள், மிகைக் கற்பனையும் புனைவும் கொண்ட கதைகள் என மாறுபட்ட சிறுகதைகளைத் தேர்வு செய்து அதன் அழகியலை சிறப்பாக விளக்குகிறார் எஸ்.ரா.