உடலுக்குள் வசிக்கும் உறுப்புகளை, கதாபாத்திரங்களாய் வடிவமைத்து தந்திருக்கிறார் நூலாசிரியர். ரத்த அணுக்களின் வகைப்பாடுகளும், அதன் செயல் திறனையும் கொண்டு ஒரு நாடகத்தையே உருவாக்கிக் காட்டுகிறார் நூலாசிரியர். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஓர் உயிரியல் பரிமாற்ற யுத்தம் நடைபெற்றுக்கொண்டுருக்கிறது. அது எல்லா உயிர்களுக்கும் கூட பொருந்தக்கூடியது. ஆனால் மனித மூளையின் ஆக்கத்தைக் கொண்டே அதாவது ஆறாவது அறிவைக் கொண்டே நிர்ணயிக்கப்படுபிறது. ஒரு மனிதன் நோயுடன் வாழ்வதற்கும். நோயற்று வாழ்வதற்கும் அவனது மனமே காரணமாகிறது. பயமும், தேவையற்ற சிந்தனைகளையும் கொண்டவர்க்கே சில நோய்கள் தொற்றுகின்றன. மனிதனின் பயத்தின் காரணமாகத்தான் மதமும் தோன்றியது என்பது வரலாறு.
- பதிப்பகத்தார்.