இந்த மாமனிதன்தான், பெண்களை அடிமைகளாக ஆண்கள் நடத்தி வந்ததைக் கண்டு - பெண்கள் ஆண்களுக்கு நிகராக வாழச் சிந்தித்தார். சிந்தித்ததைச் செயல்படுத்த விரும்பினார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்தியப் பெண்கள் அனுபவித்த அவமானத்தை அழிக்க முடிவெடுத்தார். செயலில் இறங்கினார்.
பெண் ஏன் அடிமையானாள்? என எழுதனார் பேசினார். அடிமைகளின் எசமானர்களை எச்சரித்தார். போராடினார். பெண்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தார். பெண் விடுதலைக்குப் பெரியாரின் பங்கு எத்தகையது என்பதை ஓர் ஆய்வியல் பார்வையில் அணுகுவதே இக்கட்டுரையின் நோக்கம்.