இந்தத் தொகுப்பில் உள்ள பதினைந்து கதைகளிலும் புதுமைப்பித்தன் என்ற மேதை மாநகரைப் பற்றி வேறு வேறு வண்ணங்களைத் தீற்றுகிறார். அவருடைய ஒப்புயர்வற்ற கலைத்தீற்றலில் மாநகரின் மனித வாழ்க்கை நம்கண்முன்னே பிரமாண்டமாய் எழுந்து நிற்கிறது.
புதுமைப்பித்தனை விதவிதமாக வாசிப்பது என்பது குறைந்தது இன்னும் ஒரு நூற்றாண்டுக்கேனும் தொடரும் என்று நான் நம்புகிறேன். வெவ்வேறு கோணங்களில் வாசிப்பதற்கும், அவருடைய கலைத்திறனை வியப்பதற்கும் இன்னும் ஏராளமான நுண்பிரதிகள் அவரிடம் இருக்கின்றன. வாசிக்க, வாசிக்க, பிரமிப்பூட்டுகிறவராகத் திகழ்கிறார் புதுமைப்பித்தன்.
- உதயசங்கர்