கர்நாடக இசை மன எழுச்சியூட்டும் ஒரு செவ்விசை ஆயினும் இவ்விசையை விளக்கும் இலக்கணம் இல்லாமை கண்டு மன உளைச்சல் அடைந்த நிலையில் ஆபிரகாம் பண்டிதர் எழுதிய கருணாமிர்த சாகரம் என்னும் நூலை படிக்க நேர்ந்தது. இந்நூல் கர்நாடக இசையின் இலக்கணத்தை அறிவியல் பூர்வமாக சிலப்பதிகார மேற்கோல்கள் மூலமாக விவரிப்பது மட்டுமின்றி திராவிட மக்களின் வாழ்கை முறையைப் பற்றிய பல குறிப்புகளையும் கொடுத்துள்ளது.