“நானும் அபூபக்ரும் பந்தயம் விடப்பட்ட இரு புரவிகளை ஒத்திருந்தோம். நான் முந்தி விட்டேன். அதனால் அபூபக்ர் என்னைப் பின் தொடர்ந்தார். அவர் முந்தியிருப்பாரானால் நான் அவரைப் பின் தொடர்ந்திருப்பேன்.” இவ்விதம் போற்றியவர்கள் இறைவனின் இறுதித் தூதரான அண்ணல் நபி(ஸல்) அவர்கள். இவ்விதம் போற்றப்பட்டவர்கள்¸ ஆட்சியாளர்களாய் அவர்களுக்குப் பின் வந்தவர்கள்¸ மாட்சியாளர்களாய் அவர்களின் இன்னல்களில் பங்கு கொள்ள முன்வந்த நான்கு கலீஃபாக்களில் முதல் கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள். அவர்களின் வரலாற்றைக் கூறுகிறது இந்நூல்.