அறிவார்த்த ஒடுக்குமுறை உத்திகளை மரபு, பண்பாடு என்ற பெயரில் தமிழ்ச் சிந்தனைத் துறை செயல்படுத்திக் கொண்டிருப்பதையும் அறிவு மற்றும் அறமறுப்புச் சொல்லாடல்களைப் பெருக்கிக் கொண்டிருப்பதையும் எதிர்த்து நிற்க பன்மைச் சொல்லாடல்களும் பன்மை அறிவுருவாக்கமும் தான் நமக்கு இனி அரசியல் செயல்பாடாக முடியும். இலக்கியமும் அந்த அரசியலிமன் ஒரு பகுதியே என்பதை நினைவுபடுத்தியபடி நிகழ்ந்த ஒரு சிறு உரையாடலின் சிறு பகுதியே இக்கட்டுரைகள்.