சரித்திர நாவலாசிரியர் காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் மற்றுமொரு அற்புத படைப்பு கூடலழகி. சோழ பேரரசின் சரித்திரத்தில் இன்று வரை விலகாத மர்மமாக இருப்பது ஆதித்த கரிகாலன் கொலை தான். அவன் பிறப்பிலிருந்து இறப்பு வரை நிகழும் சரித்திர நிகழ்வுகளை தன் விறுவிறுப்பான எழுத்தின் மூலம் இந்நாவலில் படைத்திருக்கிறார். ஆதித்த கரிகாலன் வாழ்வில் நடந்த மர்மங்களையும், ரகசியங்களையும் விளக்கும் கதை தான் இந்த கூடலழகி.